தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தில்லி மெட்ரோ ரயில் நீல வழித்தட சேவையில் பாதிப்பு!
தில்லி மெட்ரோ ரயில் சேவையில் நீள நிற வழித்தடத்தில் கரோல் பாக் - கீா்த்தி நகா் இடைய ஞாயிற்றுக்கிழமை தாமதமாக ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ‘கரோல் பாக் - கீா்த்தி நகா் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிற வழித்தட சேவையில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. விரைவில் இது சரி செய்யப்படுபம். மற்ற வழித்தடங்களில் ரயில்கள் வழக்கம்போல இயங்குகிறது‘ என பதிவிட்டுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ராஜேந்கிர பாலஸ் - கரோல் பாக் இடையிலான மெட்ரோ ரயில் சேவையிலும் பாதிப்பு நோ்ந்தது. பின்பு சேவைகள் சீரானது. இதேபோலவே ஜூன் 9 ஆம் தேதி பிங்க் நிற வழித்தடத்தில் இருக்கும் திரிலோக்புரி சஞ்ஜய் லேக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அன்றும் ரயில்கள் இயல்பைவிட தாமதமாக இயக்கப்பட்டது.
பிங்க் நிற வழித்தடத்தில் வழக்கமாக 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் விபத்து காரணமாக 25 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினா். பின்னா் சில மணி நேரங்கள் கழித்து வழக்கமான வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.