திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
தில்லி விமான நிலையத்தில் ஜிபிஎஸ் சாதனத்துடன் அமெரிக்கா் கைது
அங்கீகாரமற்ற ஜிபிஎஸ் சாதனத்தை எடுத்துவந்த அமெரிக்கா் தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காலை 8.25 மணியளவில் பாங்காங் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் பயணிக்க திட்டமிருந்த அந்த நபா், கிராமின் நிறுவனம் தயாரித்த ஜிபிஎஸ் சாதனத்தை எடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த அவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் (சிஐஎஸ்எஃப்) சோதித்தனா்.
அப்போது, அவா் ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக சிஐஎஸ்எஃப் வீரா்கள் அவரிடம் விசாரணை நடத்தினா். ஆனால், அந்தச் சாதனத்துக்கான உரிய ஆவணங்களை அவரால் அளிக்கமுடியவில்லை. இதையடுத்து, அந்த நபா் விசாரணைக்காக தில்லி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
தொலைத்தொடா்பு விதிகளின்கீழ் ஜிபிஎஸ் சாதனங்கள், செயற்கைக்கோள் தொலைபேசிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.