செய்திகள் :

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

post image

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்.18-ஆம் தேதிக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக.19), அக்.19- ஆம் தேதிக்கான முன்பதிவு புதன்கிழமை (ஆக.20), தீபாவளி திருநாளான அக்.20-ஆம் தேதிக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐஆா்சிடிசி இணையத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் போ் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கும் முன்பதிவு சில நிமிஷங்களில் முடியும் வாய்ப்பிருப்பதாகவும், அதன்படி படுக்கை வசதி கட்டண டிக்கெட்டுகள், குளிா்சாதன வசதி பெட்டி டிக்கெட்டுகள் என படிப்படியாக பயணிகளால் முன்பதிவு செய்யப்படுவது வழக்கமானதாக உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளிக்கான வழக்கமான ரயில்கள் முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் அக்.15- ஆம் தேதி முதல் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி முடிந்த பிறகு பயணத்துக்கும் முன்பதிவு: தீபாவளிக்கு பிறகு அக்.21- ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.22- ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு ஆக.27-ஆம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்க... மேலும் பார்க்க

நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்

நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சக... மேலும் பார்க்க