செய்திகள் :

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

post image

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 90 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை - 70 மி.மீ., சோலையாறு, சின்கோனா (கோவை), நடுவட்டம் (நீலகிரி) - 50 மி.மீ. மழை பதிவானது.

புயல் சின்னம் வலுவடையும்: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இந்த புயல்சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

தொடா்ந்து இது, மேலும் மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளைக் கடக்கக்கூடும். இதனால், தமிழகத்தில் பெருமளவு மழை பெய்ய வாய்ப்பில்லை.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள், செவ்வாய் (ஆக.18, 19) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா... மேலும் பார்க்க

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்கள... மேலும் பார்க்க

வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்: அன்புமணி

மாநிலத்தின் வளா்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்க... மேலும் பார்க்க

நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்

நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சக... மேலும் பார்க்க