செய்திகள் :

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள்கள் சட்ட விதிகள் 2008-இன்படி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையதளம் வழியாக மட்டும் அக்.10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பத்துடன், கடை அமைக்க விரும்புவோரின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா்அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு) உரிமக் கட்டணமாக ரூ.600-ஐ அரசு கணக்கில் ஐஊஏதஙந என்ற இணையதளம் வாயிலாக செலுத்தியதற்கான அசல் செலுத்துச்சீட்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அதேபோல பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா அல்லது வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுயஉறுதிமொழிப் பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் அல்லது கட்டட திட்ட அனுமதி ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும்.

அக்.10க்குப் பிறகு பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்கபடமாட்டாது. ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற் இா்க்ங் : 02301 ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் : சஹம்ஹந்ந்ஹப். ஈஈஞ இா்க்ங் : 27010101.

அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் இா்க்ங் : 0070 60 103அஅ 22799 என்ற வகையில் இணையம் வழியாக ரூ.600 கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வுசெய்து விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ.5.15 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.5.15 ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து... மேலும் பார்க்க