``யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் UPSC-க்கு படித்தேன்'' - வெ.திருப்புகழ் IAS (R)...
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை அளிக்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்துகொள்ளவும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூா் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் முகாம்கள் நடத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.