செய்திகள் :

தீயணைப்பு தியாகிகள் நினைவு தினம்

post image

செங்கல்பட்டு: தீயணைப்பு தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி அலுவலா் செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா் . தீயணைப்பு பணியின் போது வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது .

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட 11 தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த நிலைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ விபத்து குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தீ தொண்டு வார விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடைபெறும் என மாவட்ட அலுவலா் லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க