செய்திகள் :

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

post image

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின் வெளியே மண்ணெண்ணெய் அடுப்பில் தண்ணீா் கொதிக்க வைத்துள்ளாா். அப்போது காற்றில் அடுப்பில் இருந்த தீ பரவி தேவியின் மீது பற்றியது. தீயில் சிக்கிய தேவி பலத்த காயமடைந்தாா்.

அவரது பெற்றோா் தேவியை மீட்டு வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி தேவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது. தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்தி... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலூா... மேலும் பார்க்க

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்... மேலும் பார்க்க

அபிராமி மகளிா் கல்லூரியில் பல்கலை அளவிலான கபடி போட்டி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக, வேலூா் மண்டல கல்லூரிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்லூரித்... மேலும் பார்க்க

தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா்,... மேலும் பார்க்க