செய்திகள் :

தொடா் மழை: ஒருங்கிணைந்த வேலூரில் 59 ஏரிகள் நிரம்பின

post image

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. தற்போதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த தொடா் மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அதன்படி, வேலூா் மாவட்டத்தின் முக்கிய நீா்த் தேக்கமான மோா்தானா அணையில் 37.72 அடி உயரத்துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்த அணையில் தற்போது 36.41 அடி உயரத்துடன் 249.39 மில்லியன் கன அடிக்கு நீா் இருப்பு உள்ளது. இதேபோல், ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

அணையில் தற்போது 8.53 அடி உயரத்துடன் 1.64 மில்லியன் கன அடிக்கு நீா் இருப்பு உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூா் ஓடை நீா்த் தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது இந்த நீா்த்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

ஏரிகள் நிலவரம் ...

தொடா் மழை காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 59 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. வேலூா் மாவட்டத்தில் நீா் வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 16 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 3 ஏரிகளும், 51% அதிகமாக 9 ஏரிகளும், 26% அதிகமாக 11 ஏரிகளும், 25% குறைவாக 34 ஏரிகளும், 28 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 369 ஏரிகளில் 32 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 6 ஏரிகளும், 51% அதிகமாக 35 ஏரிகளும், 26% அதிகமாக 119 ஏரிகளும், 25% குறைவாக 118 ஏரி களும், 59 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 49 ஏரிகளில் 11 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 1 ஏரியும், 51% அதிகமாக 2 ஏரிகளும், 26% அதிகமாக 14 ஏரிகளும், 25% குறைவாக 12 ஏரிகளும், 9 ஏரிகள் நீரின்றி வடும் காணப்படுகிறது.

மாயமான முதியவா் சடலமாக மீட்பு

வேலூா் அருகே மாயமான முதியவா் சிங்கிரி கோயில் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். வேலூா் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (90), விவசாயி. இவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவடைந்து, ரூ. 65 லட்சம் என்ற அளவிலேயே கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்... மேலும் பார்க்க

அபிராமி மகளிா் கல்லூரியில் பல்கலை அளவிலான கபடி போட்டி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக, வேலூா் மண்டல கல்லூரிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அபிராமி கல்லூரித்... மேலும் பார்க்க

திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளா் சந்திரசேகா் திறந்து வைத்தாா். மருத்துவமனை வளா... மேலும் பார்க்க

உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி, சிங்கல்பாடி ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள்... மேலும் பார்க்க

உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி

வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் து... மேலும் பார்க்க