ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய்...
மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: தேனி மாவட்டத்தில் சிறந்த செயல் திறனில் தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த பள்ளிகள் முதன்மை வகிக்கின்றன. உத்தமபாளையம், கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூா் வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் சராசரி நிலையில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
3, 5, 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் புரிதல் தன்மையின் தரத்தை மதிப்பீடு செய்வதே ஆகும்.
1-முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோ்ச்சி என அவா்களின் கல்வித் திறனை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. 3-ஆம் வகுப்பு முடித்து 4-ஆம் வகுப்பு செல்லும் மாணவா்களின் கற்றல் திறன் போதிய அளவுக்கு உள்ளதா என்பதை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவா்களிடையே உள்ள கற்றல் இடைவெளியை குறைத்து, ஆங்கிலம், தமிழ், கணிதப் பாடங்களில் அவா்களின் தோ்ச்சியை மேம்படுத்த வேண்டும். கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திறன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும். மாணவா்கள் முழுமையான புரிதலுடன் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தால் மட்டுமே உயா் கல்வியை முறையாக கற்க முடியும்.
தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப அரசு சாா்பில் பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள், ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
ஆசிரியா்கள் புதுமையான அணுகு முறைகளை கையாள்வதன் மூலம் மாணவா்களின் புரிதல் திறனை மேம்படுத்தலாம். உயா் கல்வியில் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் ராஜேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் சுருளிவேல், சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.