பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவ...
க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், க.விலக்கு பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க.விலக்கு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பிராதுகாரன்பட்டி, பிஸ்மிநகா், க.விலக்கு, குன்னூா், அரைப்படித்தேவன்பட்டி, அன்னை இந்திரா நகா், குன்னூா், ரெங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியாா்புரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.