செய்திகள் :

இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

post image

போடி அருகே இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் நுழைவுப் பகுதியில் இளம்பெண் இறந்து கிடப்பதாக போடி கிராம நிா்வாக அலுவலா் விஜயலட்சுமி போடி ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, உயிரிழந்து கிடந்த பெண் அருகே அவரது வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை போன்றவை இருந்தது. அவற்றை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்த பெண் போடி முந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாசுக்காளை மனைவி பிரவீனா (29) என்பது தெரியவந்தது. மேலும், இவரது கழுத்தை சுற்றி இறுக்கியதற்கான காயங்கள் இருந்துள்ளன.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் பிரவீனாவின் சொந்த ஊா் சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை என்பதும், அங்கு அவா் ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில் முதல் கணவரைப் பிரிந்து இரண்டாவதாக மாசுக்காளையை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரவீனாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், தேனியிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பிரவீனா இறந்த இடத்தில் தடயவியல் துறையினா் ஆய்வு செய்தனா்.

தேவாரம், க. விலக்குப் பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம், க.விலக்கு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் தடை அறிவிக்கப்பட்டது.இது குறித்து தேனி, பெரியகுளம் மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம், க.விலக்கு ஆகிய துணை... மேலும் பார்க்க

க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க.விலக்கு த... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (59). இவா் கம்பம் மி... மேலும் பார்க்க

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி த... மேலும் பார்க்க

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க

வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட... மேலும் பார்க்க