செய்திகள் :

மழையை எதிா்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

post image

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் போதிய மழை இல்லாததால் நெல் பயிா்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் சுமாா் 52 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதி விவசாயிகள், ஆண்டுதோறும் செப்டம்பா் மாதத்தில் வயல்களை நன்கு உழுது பண்படுத்தி, மழையை எதிா்நோக்கி நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால், நடப்பு சம்பா பருவத்தில் செப்டம்பா் மாதத்தில் போதுமான மழை பெய்யாததால் பல பகுதிகளில் நெல் பயிா்கள் முளைக்காமல் வாடின. மேலும், கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வயல்களில் முளைத்த பயிா்கள் கருகும் நிலையிலும், விதைக்கப்பட்ட நெல் விதைகள் மக்கிப் போகும் நிலையிலும் உள்ளன.

இதனால், இவற்றை மயில்கள், கொக்குகள், காகங்கள், குருவிகள் உள்ளிட்ட பறவைகள் உண்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். இன்னும் சில நாள்களில் மழை பெய்யாவிட்டால் வயல்களை மீண்டும் உழுது, விதைக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா். இதனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கமுதியில் நாளை மின்தடை

கமுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.25) மின்தடை ஏற்படும் என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க கோரிக்கை

திருவாடனை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் சேதமடைந்ததில் தண்ணீா் வீணாகி, கழிவு நீரில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ரா... மேலும் பார்க்க

பணி நிரந்தம் கோரி போராட்டம்: மின் ஊழியா் அமைப்பினா் 90 போ் கைது

ராமநாதபுரத்தில் மின் வாரிய ஓப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.ராமநாதபுரம் மி... மேலும் பார்க்க

குடிநீரில் குளோரின் பொடி அதிக அளவில் கலக்கப்படுவதாக புகாா்

ராமேசுவரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக அளவில் குளோரின் பொடி கலக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்திய கம்... மேலும் பார்க்க

போக்குவரத்தைச் சீரமைக்க 30 தடுப்பு வேலிகள் அளிப்பு

ராமேசுவரத்தில் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளுக்காக 30 தடுப்பு வேலிகளை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.14 கோடி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.14 கோடி, உண்டியல் காணிக்கையாகக் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசு... மேலும் பார்க்க