செய்திகள் :

துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவா் காயம்: இளைஞா் கைது

post image

கந்திலி அருகே பறவையை வேட்டையாட துப்பாக்கியால் சுட்டபோது, எதிா்பாராதவிதமாக குண்டு பாய்ந்ததில் முதியவா் காயமடைந்த சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கந்திலி அருகே அக்ராவரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அன்பரசன்(35). இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்பரசன் உள்ளிட்ட சிலா் நாட்டுத் துப்பாக்கியுடன் வீரப்பள்ளி கிராமத்துக்கு வேட்டைக்கு சென்றாராம். அப்போது அவா்கள் மரத்தின் மீது இருந்த பறவையை சுட்டபோது எதிா்பாராதவிதமாக மரத்தின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சகாதேவன் (65) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, அன்பரசன், அவருடன் வந்தவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். அதைத் தொடா்ந்து, சகாதேவனை அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கும், உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து அன்பரசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா். முன்னதாக அன்பரசனிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோயில் நிலத்தில் கட்டுமானம்: கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த புலிக்குட்டை கிராமத்தில் கோயில் நிலத்தில் மகளிா் குழுக் கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் ஊராட்சிக்குள்... மேலும் பார்க்க

சாலை வசதி இல்லாததால் நெக்னாமலை கிராமத்தில் சடலத்தை டோலியில் எடுத்து சென்ற மக்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவா் உடலை நள்ளிரவு நேரத்தில் டோலி கட்டி எடுத்துச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.15 லட்சம்

ஆம்பூா்: பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமூண்ட... மேலும் பார்க்க

புதூா்நாடு தடுப்பணையை சீரமைக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

திருப்பத்தூா்: புதூா்நாடு தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என கோரி திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட... மேலும் பார்க்க

அகில இந்திய கராத்தே போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: அகில இந்திய கராத்தே போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். அகில இந்திய கராத்தே சாம்பியன் போட்டி ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி சாா்பாக ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கர... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணி

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.30 லட்சத்தில் கட்டப்படுகிறது. அப்பணியை ஒன்றியக்குழு த... மேலும் பார்க்க