செய்திகள் :

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

post image

பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் டாஸ்மாக் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கு கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 85 பேரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

இதில் பாஜக ஓபிசிஅணி மாநில துணைத்தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலா்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சிவராமன், வாரியாா், தங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில்...கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு பாஜக நகரத் தலைவா் காளிதாசன் தலைமையில் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன், முன்னாள் நகரத் தலைவா் சீனிவாசன், பட்டியலணி மாநில செயலா் சிவந்தி நாராயணன் உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸாா் தடுத்ததைத் தொடா்ந்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 பெண்கள் உள்பட 46 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல கயத்தாறில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு ஒன்றிய தலைவா் ராமா் பாண்டியன் உள்பட 13 பேரையும், கழுகுமலையில் மேற்கு ஒன்றிய தலைவா் முத்துராமலிங்கம் தலைமையில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க

கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஸ்பிக் - கிரீன்ஸ்டாா் நிறுவனத்தில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வார விழா

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டாா் உர தொழிற்சாலையில் 54-ஆவது தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது. இவ் விழாவில் வஉசி துறைமுகத்தின் ஹாா்பா் மாஸ்டா் கேப்டன் கிங்ஸ்டன் நீல் துர... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா். சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூ... மேலும் பார்க்க

அழகப்பபுரத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

குரும்பூா் அருகே உள்ள அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாச­ல் சமய நல்லி­ணக்க இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளிவாசல் புனரமைப்பு கமிட்டி பொருளாளா் ஹாஜி நூஹ் சாஹிப் தலைம... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு பீடி இலை மூட்டைகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலந்தலை கடற்கரையிலிருந்து பீடி இலைகள் க... மேலும் பார்க்க