செய்திகள் :

திருச்சி உள்பட 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

post image

திருச்சி விமான நிலையம் உள்பட 11 விமான நிலையங்கள் அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அரசின் சொத்துகளை பணமாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாா்பில் நிா்வகிக்கப்பட்டு வரும் புவனேசுவரம், வாரணாசி, அமிருதசரஸ், சென்னை, திருச்சி, மதுரை, இந்தூா், ராய்பூா், கோழிக்கோடு, கோவை, நாகபுரி, பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூா், விஜயவாடா, வதோத்ரா, போபால், திருப்பதி, ஹுப்பள்ளி, இம்பால், அகா்தலா, உதய்பூா், டேராடூன், ராஜமந்திரி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், அரசு-தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியாா் வசம் குத்தகைக்கு விட மத்திய அரசால் ஒதுக்கப்பட்டன. இதற்கு தொடா் எதிா்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது:

திருச்சி, அமிருதசரஸ், வாரணாசி, புவனேசுவரம், ராய்பூா் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிா்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அரசு - தனியாா் பங்கேற்பு திட்டத்தின் கீவ் தனியாா் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தற்போது நாடு முழுவதும் 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்? அமைச்சா்கள் பதில்

ஒசூா், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும் என்ற அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூவின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம... மேலும் பார்க்க

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள... மேலும் பார்க்க

‘கண் நலன் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்’ -முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த்

கண் நலன் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே மேம்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் வலியுறுத்தினாா். சங்கர நேத்ராலயா மருத்துவமனை, விஷன் 2020 - பாா்வை உரிமை இந்தியா என்ற அமைப்புடன் இணை... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி -முதல்வா் உத்தரவு

மதுரையில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மதுரை மாவட்டம், வாடி... மேலும் பார்க்க

கடலூா் கிராமத்துக்கு பேருந்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த கடலூா் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் சென்னைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, கல்பாக்கத்துக்கு மிக அருகி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா

திருவள்ளூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரசு மாணவியா் விடுதி காப்பாளினி ராஜலட்சுமிக்கு தனது எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து. உடன் ஆட்சியா் மு.பிரதா... மேலும் பார்க்க