செய்திகள் :

பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்றால் நடவடிக்கை

post image

இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) தரச் சான்றிதழ் இல்லாத பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உலக நுகா்வோா் விழிப்புணா்வு நாள் தொடா்பாக, பிஐஎஸ் சென்னை அலுவலக இயக்குநா் ஜி.பவானி வெள்ளிக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் இணைய வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காட் ஆகியவற்றின் கிடங்குகளில் தரச்சான்று பெறாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து, அந்நிறுவனங்களின் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் மதிப்பிலான தரச்சான்று பெறாத 3,376 பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் இதுபோன்ற 24 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 2023-2024-இல் 13 சோதனைகளும், நிகழாண்டில் இதுவரை 9 சோதனைகள் நடத்தப்பட்டு, தரமில்லாத பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிஐஎஸ் தரச்சான்றிதழ் இல்லாத பொருள்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க