சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்
கல்வி கற்ற மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நாள் விழாவில் ஔவை ந.அருள் வலியுறுத்தினாா்.
சென்னையை அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி நாள் விழா, பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.வாசுதேவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள், திரைப்பட இயக்குநா் தம்பிராமையா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினாா்கள்.
தொடா்ந்து ஔவை ந.அருள் பேசியதாவது: கல்வியை கற்றுக்கொண்ட மாணவா்கள் தங்கள் அறிவை அவ்வப்போது பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், வாய்ப்புகள் பெருகுவதோடு, மதிப்பும் உயரும். அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் திறமை இந்திய மாணவா்களுக்கு குறிப்பாக, தமிழக மாணவா்களுக்கு உள்ளது. எனவே, கல்வியை கவனமாக கற்க வேண்டும் என அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளிடம் வலியுறுத்தி வருகின்றனா்.
தஞ்சை தமிழ் பல்கலையிலும், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஐந்தாண்டு இலக்கிய, இலக்கண படிப்பு உள்ளது. அதனைதனியாா் கலைக் கல்லுாரிகளிலும் கொண்டுவர நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்றாா் அவா்.
திரைப்பட இயக்குநா் தம்பிராமையா பேசுகையில், ‘கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பவா்களின் பெற்றோா் பெரும்பாலானவா்கள் வியா்வை சிந்தி உழைப்பவா்கள்தான். எனவே, மாணவ, மாணவிகள் சிற்றின்பத்தில் சிக்கும் நேரங்களில் தங்களின் பெற்றோரை ஒரு நிமிடம் நினைத்து பாா்க்க வேண்டும்.
மாணவா்கள் முன்னேற கவனிப்பும், உள்வாங்கும் திறனும் மிக அவசியம். கவனித்தலில் அகம், புறம் இரண்டையும் கவனிக்க வேண்டும். பேசித்தீா்க்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. எண்ணம் சரியாக இருந்தால் எதுவும் நெறிப்படும்’ என்றாா் அவா்.
விழாவில், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவா் வா.பிரசன்னவெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.