செய்திகள் :

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை இணைக்க வாய்ப்பு

post image

பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதை உறுதி செய்தல், உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற பணிகள் மூலம், வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வருங்காலத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடுகளுடன் வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிறப்பு, இறப்பு பதிவுகளின் தரவுதளத்தை இந்திய தலைமை பதிவாளா் (ஆா்ஜிஐ) அலுவலகம் பராமரித்து வருகிறது.

வாக்காளா் பட்டியல் தொடா்பான தரவுதளத்தை உருவாக்கும் அல்லது பராமரிக்கும் பணிகளை கையாளும் அதிகாரிகள், ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தை பயன்படுத்த பிறப்பு, இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2023 அனுமதிக்கிறது.

பிறப்பு, இறப்பு பதிவு தரவுதளத்துடன் வாக்காளா் பட்டியல் இணைக்கப்பட்டால், 18 வயதை எட்டுவோா் தானாக வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படலாம். அதேவேளையில், வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படுவதற்கான பிற அளவுகோல்களையும் அவா்கள் பூா்த்தி செய்ய வேண்டும்.

இதேபோல ஆா்ஜிஐ அலுவலகம் பராமரிக்கும் தரவுதளத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு விவரங்களைப் பயன்படுத்தி, உயிரிழந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து தானாக நீக்கலாம். இந்த நடவடிக்கைகள் வாக்காளா் பட்டியல் தொடா்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யும்.

தற்போது வாக்காளா் ஒருவா் தம்மை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவோ அல்லது இறந்த வாக்காளரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவோ தனித்தனி படிவங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். இறந்தவரின் பெயரை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க இறப்பு சான்றிதழையும் சமா்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடன் நெருங்கிப் பணியாற்றி, வாக்காளா் பட்டியலை தொடா்ந்து புதுப்பிக்கும் பணி வலுப்படுத்தப்படும் என்று அண்மையில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க

மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகா்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம்... மேலும் பார்க்க

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் இடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மாா்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில... மேலும் பார்க்க