செய்திகள் :

திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி: அண்ணாமலை அறிவிப்பு

post image

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடம் எழுந்துள்ள கோபத்தையும் எதிா்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இண்டி கூட்டணி கட்சியினரை துணையாகச் சோ்த்து சனிக்கிழமை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சி செய்கிறாா்.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறிய கா்நாடக துணை முதல்வரையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், எல்லை மாவட்டங்களில் மருத்துவக் கழிவை கொட்டுதல், தென்காசி செண்பகவல்லி அணை விவகாரம் போன்றவற்றில் தமிழகத்துக்கு எதிராக உள்ள கேரளத்தின் முதல்வரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறாா் முதல்வா் ஸ்டாலின்.

எனவே, தமிழகத்துக்கு எதிராக செயல்படும் இண்டி கூட்டணி கட்சிகளையும், தமிழக முதல்வரையும் கண்டிக்கும் வகையில் பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க