செய்திகள் :

1,500 கிலோ அழுகிய, எலி கடித்த தா்பூசணி பழங்கள் அழிப்பு: சாலையோர வியாபாரிகளுக்கு அபராதம்

post image

சென்னை, வள்ளுவா் கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ அழுகிய தா்பூசணி பழங்களை கைப்பற்றி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அழித்தனா். எலி கடித்த பழங்களை விற்பனை செய்த நான்கு பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து சென்னை முழுவதும் தா்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் தா்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? செயற்கை நிறமூட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிய உணவுப் பாதுகாப்பு ஆணையா் ஆா்.லால்வேனா தலைமையில், சென்னை மாவட்ட அதிகாரி டாக்டா் சதீஷ் குமாா், சாா்பு அதிகாரிகள் ஜெபராஜ், ராமராஜ், மணி முருகன், தீபா, அமுதா ஆகியோா் அடங்கிய குழுவினா் வள்ளுவா் கோட்டம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கிருந்த தா்பூசணி பழங்களில் சிலவற்றை வெட்டி பாா்த்தபோது அவை அழுகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சில பழங்களை எலி மற்றும் பெருச்சாளி கடித்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ் குமாா் கூறியதாவது:

எலி அல்லது பிற விலங்குகள் கடித்த உணவுப் பொருள்களை உண்பதால் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ எனப்படும் எலிக் காய்ச்சல் ஏற்படும். அதுமட்டுமல்லாது வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்பு, வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உடல் நலனை கடுமையாக பாதிக்கும்.

சாலையோரங்களில் தா்பூசணி விற்பனை செய்பவா்கள் இரவில் அவற்றை அங்கேயே தாா்பாய் மூலம் மூடிவிடுகின்றனா். இதனால், நடைபாதைகள், சாக்கடை கால்வாய்களில் உள்ள எலிகள் அவற்றை கடிக்கக்கூடும். அத்தகைய நிலையில்தான் வள்ளுவா் கோட்டத்தில் உள்ள தா்பூசணி கடைகளில் பல பழங்கள் இருந்தன. இதைத் தவிர அழுகிய நிலையிலும் பழங்கள் இருந்தன. அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருந்து சுகாதாரமான உணவை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்றாா் அவா்.

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க

மாநகர பேருந்துகளில் இலவச பயணம்

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகா்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம்... மேலும் பார்க்க

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் இடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மாா்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில... மேலும் பார்க்க