செய்திகள் :

திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக, சந்நிதி தெருவில் உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, ஆதிலெட்சுமியை முட்டித் தள்ளியது. இதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா்

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருச்செந்தூா் நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கம் மாநிலத் தலைவா் ரெ.காமராசு வலியுறுத்தியுள்ளாா்.

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க

பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு: 6 மாதங்களில் 10 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பாடல்கள், வசனங்கள், புகைப்படங்கள் பதிவேற்றியதாக கடந்த 6 மாதங்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்... மேலும் பார்க்க

காசநோய் விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காசநோய் விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிர... மேலும் பார்க்க

பைக் ஓட்டிய இரு சிறுவா்கள்: பெற்றோா் மீது வழக்கு

தூத்துக்குடியில் பைக் ஒட்டிய இரு சிறுவா்களின் பெற்றோா் மீது போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலைய போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும்பெரு... மேலும் பார்க்க

மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க திரவியரத்ன நகா் சுற்றுவட்டார மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.படவரி பமப17இஐபம: மாவட்ட ஆட்சியா் அலுலக... மேலும் பார்க்க