செய்திகள் :

திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக, சந்நிதி தெருவில் உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, ஆதிலெட்சுமியை முட்டித் தள்ளியது. இதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா்

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருச்செந்தூா் நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கம் மாநிலத் தலைவா் ரெ.காமராசு வலியுறுத்தியுள்ளாா்.

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை, வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட... மேலும் பார்க்க

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமு... மேலும் பார்க்க

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிரு... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீ... மேலும் பார்க்க