செய்திகள் :

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

post image

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 1,2 ஆகிய அலகுகளில் ஹெச்டி கேபிள் வயா்கள், பிரேக்கா்கள், கண்ட்ரோல் அறைகள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமாகின. 3ஆவது அலகிலும் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, 1,2,3 ஆகிய மூன்று அலகுகளிலும் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 1,2 அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க சுமாா் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என அண்மையில் ஆய்வுக்கு வந்த தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குநா் அல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா். மேலும், இந்த தீ விபத்து சேத விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பொறியாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் இது தொடா்பாக ஆய்வு மேற்கொள்வா் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, அனல் மின் நிலைய தீ விபத்து சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை பொறியாளா் கனி கண்ணன் தலைமையில் வடசென்னை, மேட்டூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களைச் சோ்ந்த பொறியாளா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் அனல் மின் நிலையத்தில் ஆய்வை தொடங்கியுள்ளனா். 10 நாள்களுக்குள் ஆய்வு செய்து சேதம் மதிப்பு உள்ளிட்டவை குறித்த அறிக்கையை அரசுக்கு வழங்க உள்ளதாக அனல் மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை, வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி... மேலும் பார்க்க

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமு... மேலும் பார்க்க

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிரு... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீ... மேலும் பார்க்க

ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்

ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாக... மேலும் பார்க்க