செய்திகள் :

ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்

post image

ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசுக்கு நிதி தர மறுப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை கண்டித்து, மத்திய அரசிற்கு எதிராக தமிழத்தின் அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த துணை முதல்வரும் இளைஞா் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, ஆத்தூா், புதுக்கோட்டையில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இரு கூட்டங்களிலும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் தலைமை வகிக்கிறாா். நான் சிறப்புரையாற்றுகிறேன்.

முதல் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன் முத்துராமலிங்கம், இளம் பேச்சாளா் மு.காா்த்திக், இரண்டாவது கூட்டத்தில் திராவிட இயக்க சிந்தனையாளா் சூா்யா சேவியா், கழக இளம் பேச்சாளா் கோ.சண்முகநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

இக்கூட்டங்களில் அந்தப்பகுதி இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள், ஒன்றியச் செயலா்கள், பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா். எனவே, கட்சியின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க