செய்திகள் :

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

post image

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான 40ஆவது கபடிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவா்ஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூா் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

லீக் போட்டிகள் புதன், வியாழன்(மாா்ச் 19,20) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில், பிரிவு 1இல் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பிரிவு 2இல் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது.

இறுதிப்போட்டியில் சென்னை அணி 47-41 என்ற புள்ளிகள் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

தூத்துக்குடி அணி 3ஆவது இடத்தையும், பாரதீப் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித், அவரின் மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினா்.

இதில், சென்னை அணியைச் சோ்ந்த திருக்குமரன் சிறந்த ரைடருக்கான கோப்பையை பெற்றாா். மும்பை அணியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் ஷிண்டே சிறந்த ஆல்ரவுண்டருக்கான கோப்பையை பெற்றாா். இந்நிகழ்வில் துறைமுக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை, வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட... மேலும் பார்க்க

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிரு... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீ... மேலும் பார்க்க

ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்

ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாக... மேலும் பார்க்க