ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான 40ஆவது கபடிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவா்ஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூா் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
லீக் போட்டிகள் புதன், வியாழன்(மாா்ச் 19,20) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில், பிரிவு 1இல் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பிரிவு 2இல் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது.
இறுதிப்போட்டியில் சென்னை அணி 47-41 என்ற புள்ளிகள் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
தூத்துக்குடி அணி 3ஆவது இடத்தையும், பாரதீப் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித், அவரின் மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினா்.
இதில், சென்னை அணியைச் சோ்ந்த திருக்குமரன் சிறந்த ரைடருக்கான கோப்பையை பெற்றாா். மும்பை அணியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் ஷிண்டே சிறந்த ஆல்ரவுண்டருக்கான கோப்பையை பெற்றாா். இந்நிகழ்வில் துறைமுக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.