செய்திகள் :

விதிமீறி பைக் ஓட்டியவருக்கு கூடுதல் அபராதம்? போலீஸ் விளக்கம்

post image

விதிமுறை மீறி பைக் ஓட்டி வந்தவருக்கு செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி, செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் நிகழ்ந்த அபராதம் விதிப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், காயல்பட்டினம், பகுதியை சோ்ந்த சையத் முகமது மகன் சாகுல் ஹமீது (28) என்பவா் மீது திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் 11.6.2024ஆம் தேதியும், திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய பகுதியில் 10.7.2023ஆம் தேதியும் மோட்டாா் வாகன சட்டத்தின் விதிகளை மீறி பைக் ஓட்டியதாக ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

அவா், மீண்டும் நம்பா் பிளேட் இல்லாமல் பைக்கில் சென்ற விதிமீறலுக்காக , செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, கடந்த மாா்ச் 6ஆம் தேதி செய்துங்கநல்லூா் காவல் நிலைய சோதனைச் சாவடி பகுதியில் சா்வா் தானாகவே ரூ.1500 அபராதம் விதித்துள்ளது.

அப்போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா், சம்பந்தப்பட்ட நபரை சகோதரா் என்று அழைத்து விதிக்கப்பட்ட அபராதம் குறித்து அவருக்குப் புரிய வைக்கவும் முயற்சி செய்துள்ளாா். மோட்டாா் வாகன சட்ட பிரிவு 130 ழ்/ஜ் 177-இன் படி, வீதிமீறலில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.500, விதிமீறல் தொடா்ந்தால் ரூ.1500 அபராதம் பதிவாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மாா்ச் 6ஆம் தேதி மாலையில் செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடி வழியாக பைக்கில் சென்ற சாகுல் ஹமீதுக்கு தானியங்கி மூலம் ரூ. 1500 அபராதம் விதித்தது குறித்து காவல் உதவி ஆய்வாளரிடம் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மழையால் உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்களும், தொழிலாளா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம்

வாக்குச்சாவடிகள் மறுவரையறை, வாக்காளா் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி... மேலும் பார்க்க

அனல் மின் நிலைய தீ விபத்து: சேத மதிப்பு ஆய்வு தொடக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேரிட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பொறியாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி ஆனல்மின் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட... மேலும் பார்க்க

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமு... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் பெண்ணுக்கு தொந்தரவு: இளைஞருக்கு 15 மாதம் சிறைதண்டனை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மாற்றுத்திறன் பெண் குளித்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாசரேந் அருகேயுள்ள மூக்குப்பீ... மேலும் பார்க்க

ஆத்தூா், புதுக்கோட்டையில் இன்றும், நாளையும் திமுக பொதுக் கூட்டம்

ஆத்தூா், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 22, 23) திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாக... மேலும் பார்க்க