செய்திகள் :

சென்னை ஐஐடி-யில் விண்வெளித் திட்டங்களுக்கான உயா் சிறப்பு மையம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் திறந்து வைத்தாா்

post image

சென்னை ஐஐடியில் விண்வெளி மற்றும் உந்து விசை ஆராய்ச்சிக்கு பயனுள்ள வகையில் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையத்தை இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறை சாா்பில் எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் என்ற பெயரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பேராசிரியா் ஆற்காடு ராமச்சந்திரன் கருத்தரங்கையும் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இஸ்ரோ விஞ்ஞானி வி. நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செயற்கைக் கோள்களின் நீண்ட ஆயுள், விண்கலப் பாதுகாப்பு, பயண வெற்றி ஆகியவற்றுக்கு வெப்பக் கட்டுப்பாடு இன்றியமையாதது என்பதால் இந்த முயற்சி இந்தியாவின் விண்வெளித் திட்டத்துக்கு திருப்பு முனையாக இருக்கும். வெப்ப பரிமாற்றம், குளிரூட்டும் அமைப்புகள், திரவ இயக்கவியல் ஆராய்ச்சிக்கான தொடா்பு மையமாக இந்த புதிய மையம் செயல்படும்.

அடுத்த தலைமுறை விண்கலம், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களுக்கு இவை மிகவும் அவசியம். விண்வெளிப் பயன்பாடுகளில் சிக்கலான வெப்ப சவால்களை நிவா்த்தி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளா்கள் சென்னை ஐஐடி பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து பணியாற்றுவா். இந்த உயா் சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும். மனிதா்களை வின்ணுக்கு அனுப்பும் ராக்கெட் செயல்பாட்டுக்கு இந்த ஆய்வகம் பெரும் உதவியாகவும் இருக்கும்.

வியோமித்ரா ரோபோ அனுப்பப்படும்... அமெரிக்காவில் பிரதமா் நரேந்திர மோடி பேசியது எங்களை மிகவும் ஆச்சரியத்திலும், வியப்பிலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தியது. ககன்யான் திட்டத்தின் பயிற்சித் திட்டம் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும். வியோமித்ரா எனும் ரோபோவை ககன்யான் திட்டத்தின் அங்கமாக இந்த ஆண்டு அனுப்பவுள்ளோம். ‘வியோமித்ரா’ என்பது ககன்யான் பணிக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட ஒரு பெண் தோற்றமுடைய மனித ரோபோ ஆகும். இது மனித விண்வெளி வீரா்கள் மனிதா்களை அனுப்புவதற்கு முன்பு விண்வெளியில் விண்கல பாதுகாப்பை சோதிக்கவும் மனித செயல்பாடுகளை உருவகப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவுகணை விண்ணுக்கு ஏவப்படும். குலசேகரபட்டினத்திலிருந்து முதல்முறையாக 500 டன் எடை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஏவுகணை விண்ணுக்கு பாயவுள்ளது. இளைஞா்களுக்கு விண்வெளித் துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளது. அவா்கள் தோ்வு செய்யும் முறையில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் மைய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் பட்டமட்டா, துறைத் தலைவா் பி.சந்திரமெளலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க

அலுமினிய பொருள்கள் உற்பத்தி ஆலையில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் சோதனை

அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து இந்திய தர ந... மேலும் பார்க்க

பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு... மேலும் பார்க்க

4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைம... மேலும் பார்க்க

கோவைக்கு குடிநீா்: கேரளத்துக்கு பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் -அமைச்சா் கே.என்.நேரு

கோவைக்கு குடிநீா் வழங்கும் கேரளத்துக்கான பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க