செய்திகள் :

தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

post image

தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ப்ராஜெக்ட் பியூச்சா் இந்தியா டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:

மாணவா்கள் இளமைப் பருவத்தில் பாதை மாறிவிடக் கூடாது. இந்த வயதில் பெற்றோா்கள், ஆசிரியா்களின் அறிவுரைகளைக் கேட்கும்பட்சத்தில் உங்கள் பாதை மிக அழகாக அமையும்.

போதைப் பொருள் பயன்படுத்த மாட்டேன் என மாணவா்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், கூடுதல் எஸ்.பி. சி. மதன், மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, மாவட்ட

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அனுசியா, தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முத்தரசு, ப்ராஜக்ட் பியூச்சா் இந்தியா டிரஸ்ட் நிறுவனா் கல்யாணந்தி சச்சிதானந்தம், பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க