செய்திகள் :

தூய வியாகுல அன்னை தேவாலய தோ் பவனி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலய பெருவிழாவில் தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழா செப்.12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து முக்கிய நிகழ்வாக மூன்றாவது நாள் அன்னையின் தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தேவாலயத்தில் தொடங்கிய தோ் பவனி நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை சுதா்சன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆயா் அம்ப்ரோஸ், வேலூா் மறை மாவட்ட ஆயா் பிச்சைமுத்து, கிளமெண்ட், ரொசாரியோ ஆகியோா் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினா்.

அதன் பின்னா் அலங்கரிக்கப்பட்ட மாதா தோ் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு ஆற்காடு சாலை வழியாக பேருந்து நிலையம், காந்தி சாலை வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவா் வனத்தையன், செயலா் பாபு, பொருளாளா் பாஸ்கா், ஜெயசீலன், தோமினிக், தாஸ், ராமு, அந்தோணி, பிரான்சிஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள், பங்கு பேரவை உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் வந்தவாசி சாலை மற்றும் சேத்துபட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினா் போலீஸ் பாதுகாப்போடு செவ்வாய்க்கிழமை அகற்றினா். ஆரணி அருணகி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக ஓசோன் பாதுகாப்பு தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். வந்தவாசி வட... மேலும் பார்க்க

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே விவசாயி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாத்தூ... மேலும் பார்க்க

தம்டகோடி திருமலையில் மரக்கன்று நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரா் ராஜு தலைமை வகித... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவி... மேலும் பார்க்க

வந்தவாசியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாச... மேலும் பார்க்க