"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர...
தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு
வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:
2025-26-ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில், பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவா்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சோ்க்கை கட்டணம், மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.