செய்திகள் :

தெரு நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழப்பு

post image

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதி ஏந்துவாம்பாடி கிராமத்தில் தெருநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன.

ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாமலை. இவா் தன்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்து கொண்டு 70-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்த்து பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், அண்ணாமலை திங்கள்கிழமை இரவு ஆடுகளை மேய்த்து கொட்டகைகளில் அடைத்து விட்டு அருகேயுள்ள தனது வீட்டில் தூங்கினாா்.

நள்ளிரவில் ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது, தெரு நாய்கள் ஆடுகளை கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் நாய்களை அடித்து விரட்டினாா்.

மேலும், கூச்சலிட்டு ஊரில் உள்ளவா்களை அழைத்து அனைத்து நாய்களையும் விரட்டினாா். நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. மீதம் இருந்த ஆடுகள் நாய்களுக்குப் பயந்து கொட்டைகளில் ஒதுக்குப்புறமாக ஒதுங்கி இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த களம்பூா் சுகாதாரத் துறையினா் மற்றும் கால்நடைத் துறையினா் வந்து இறந்து கிடந்த ஆடுகளை பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டனா்.

நாய்களால் சாலை விபத்துகள்

ஆரணி, களம்பூா், போளூா், சேத்துப்பட்டு, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் வீதிகளில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனா்.

மேலும், சாலைகளில் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவைகள் மூலம் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

இதனால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகத்தினா் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஆரணியை அடுத்த ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலை பொதுமக்கள் கிராம தே... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

வள்ளலாா் தினத்தையொட்டி, செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் பால், பழம், ரொட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும், துக்காப்பேட்டையில் வள்ளலாா் உருவப்... மேலும் பார்க்க

கோயிலில் அம்மன் தங்கத் தாலி திருட்டு

செய்யாற்றை அடுத்த சுமங்கலி கிராம அலங்கார வள்ளியம்மன் கோயிலில் தங்கத் தாலி திருடு போனதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட சுமங்கலி கிராமத்தில் ஸ்ரீஅலங்க... மேலும் பார்க்க

மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சியின் சாதாரண ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

தைப்பூச விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மூல... மேலும் பார்க்க