செய்திகள் :

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

post image

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிச்சந்தைகளில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதை இயந்திரம் மூலம் நாராக்கி அதன் மூலம் கயிறு தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கபட்டிருந்த தேங்காய் மட்டைகள் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பற்றியுள்ளது. தீ மள மளவென்று தொழிற்சாலை முழுவதும் பரவி எரியத்தொடங்கியுள்ளது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலையிலான வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்புமாறு கீரனூர் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்ததைத் தொடர்ந்து இரண்டு வண்டிகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடிய போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மூலப்பொருள்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான்: 10 தீவிரவாதிகள் கைது! பயங்கரவாத சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தெஹ்... மேலும் பார்க்க

மியான்மரின் பொது தேர்தல் எப்போது? ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் மக்களாட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகும் ... மேலும் பார்க்க

உ.பி: சிறைவாசிகள் 5 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் மவூ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மவூவின் பிஜாரா பகுதியிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிக... மேலும் பார்க்க

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையில் இந்தியர்!

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித் பட்டிடார் (வயது 18), இவரு... மேலும் பார்க்க

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச்.4 அன்று நள்ளிரவு லாத்தூரின் அவுஸா நகரத்திலுள்ள ஒரு கடையின் வாசலில்... மேலும் பார்க்க

குவைத் நாட்டில் விமான சேவை பாதிப்பு!

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் இன்று (மார்ச் 8) சில மணி நேரத்திற்கு விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு பகுதியில் எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத்தில், தரையிறங்க வ... மேலும் பார்க்க