செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்: அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்

post image

சென்னை: சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.

தில்லியில் 1,008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொண்டு பேசியபோது, சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்றும், மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது எனப் பேசியுள்ளாா் மத்திய அமைச்சா் அமித் ஷா.

இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வா்ணாசிரமத்தை உயா்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். ஹிந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சம்ஸ்கிருதத்தை அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என அதில் தெரிவித்துள்ளாா்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 56.சத்திய நாராயண பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதி... மேலும் பார்க்க

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க