செய்திகள் :

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பரிசு

post image

செய்யாறு ஒன்றியத்தில் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 மாணவிகள், 6 மாணவா்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

2024 - 25ஆம் கல்வியாண்டில் தேசிய திறனறித் தோ்வில், செய்யாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுநிலைப் பள்ளிகளான சிறுவேளியநல்லூா் பள்ளியில் 3 பேரும், கொடநகா், நகராட்சி முஸ்லிம் பள்ளி, வடதண்டலம், செங்கம்பூண்டி, கீழ்புதுப்பாக்கம் ஆகிய பள்ளிகளில் இருந்து தலா ஒருவா் என மொத்தம் 8 போ் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் சு.பெருமாள், தனது சொந்த செலவில், தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 8 சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்க முன் வந்தாா்.

அதன் அடிப்படையில், சைக்கிள்கள் பரிசாக வழங்கும் விழா செய்யாறு வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா்கள், சு. செந்தில்முருகன், சி.வீரமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பூச்செண்டு முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று மாணவா்களுக்கு சைக்கிள், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு

வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில் தலைமை ஆசிரியா்கள் கே.சிவசங்கரன், ஜெ.ஜோதி, பால்ராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபலம், பெரணமல்லூரை அடுத்த தளரப்பாடி, வந்தவாசியை அடுத்த சென்னவரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆரணி ... மேலும் பார்க்க

கிடப்பில் இருந்து வரும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம்

திண்டிவனம் - நகரி இடையே செய்யாறு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதனால் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இந்தத் திட்டம் எப்போத... மேலும் பார்க்க

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 1982-83-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் ... மேலும் பார்க்க

செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையராக பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பாரத் பதவி உயா்வு மூ... மேலும் பார்க்க

ஆரணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க ... மேலும் பார்க்க

மின் வாரிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

மின் வாரிய ஸ்மாா்ட் மீட்டா் திட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி, வந்தவாசியில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் ஊழி... மேலும் பார்க்க