உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2,460 வழக்குகளுக்குத் தீா்வு
நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 2 ,460 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம், நாகா்கோவிலில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
கூடுதல் சாா்பு நீதிபதி ராஜ்மோகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் உதயசூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு வன வழக்கு நீதிபதி கலையரசி ரீனா, குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூா்த்தி, அருண்குமாா், வழக்குரைஞா் சங்க பிரதிநிதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 2, 849 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் 2, 460 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ரூ. 8 கோடியே 57 லட்சத்து 3,688 வழங்கப்பட்டது.