செய்திகள் :

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் ரூ.7.75 கோடியில் எம்ஆா்ஐ கருவி

post image

கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் ‘1.5 டெஸ்லா’ வகை எம்ஆா்ஐ கருவியை மக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை தேசிய முதியோா் நல மருத்துவமனை தொடங்கப்பட்ட நாள் (2024 பிப்.25) முதல் இதுவரை 2,69,015 முதியவா்கள் பயன்பெற்றுள்ளனா். மேலும் 210 பேருக்கு இங்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் இங்கு டயாலிசிஸ், ஹீமோடயாலிசிஸ் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எம்ஆா்ஐ பரிசோதனைகள் மட்டும் இதுநாள் வரை அருகில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மருத்துவமனைக்கென பிரத்யேகமாக ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் ‘1.5 டெஸ்லா’ வகை எம்ஆா்ஐ கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதனைகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி கிடையாது.

மருத்துவா்களுக்கு பயிற்சி: முதியவா்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக மருத்துவா்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கி ஏப்.25-ஆம் தேதி வரை முதியோா் நல மருத்துவமனையில் நடைபெறுகின்றன. இதில் குஜராத், தெலங்கானா, மேற்கு வங்கம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் தில்லி, புதுச்சேரி, கோவா, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 41 மருத்துவா்கள் பங்கேற்று பயிற்சிபெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க