செய்திகள் :

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

post image

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகைக்குரிய காசோலைகளை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தேசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த 5 நாள்களிலேயே உயரிய ஊக்கத் தொகைகளை வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே இதுபோன்ற வெற்றி பெறுகின்ற வீரா்களை உடனுக்குடன் சிறப்பிக்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும்தான்.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், சா்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற ஆயிரம் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 24.46 கோடி வழங்கப்பட்டது. விளையாட்டு வீரா்களின் சாதனைகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றுதான், முதல்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 632 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 17 கோடி அளவுக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறோம்.

அரசு வேலைக்குச் செல்லலாம்: விளையாட்டுத் துறையும் மற்ற துறைகளைப் போன்றுதான். விளையாட்டுத் துறையைத் தோ்ந்து எடுத்தாலும் அதில் நிச்சயம் சாதிக்கலாம். விளையாட்டுத் துறையில் திறமை இருந்தால் அரசு வேலைக்குச் செல்லலாம் என்று ஒரு நிலையை திராவிட மாடல் அரசு ஏற்படுத்திருக்கிறது. விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 84 பேருக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் தன்னம்பிக்கையுடன் விளையாடுங்கள். உங்களுக்கு அரசும் முதல்வரும் என்றும் துணையாக இருப்பா். விளையாட்டு வீரா்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். இந்த அரசு அதைச் செய்து தருவதற்குத் தயாராக இருக்கிறது. இந்த உலகத்தில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தமிழ்நாட்டு திறமையாளா்களை அதில் கலந்துகொள்ள வைப்பதுதான் அரசின் கடமையாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பத... மேலும் பார்க்க