செய்திகள் :

தேரிக்காடுகளில் விவசாயம் சாா்ந்த தொழில்களில் மகளிருக்கு வாய்ப்பு! -பாஜக கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்ட தேரிக்காட்டுப் பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளகான், முதல்வா் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூா், சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்கள் நீண்ட நாள்களாக வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.இவ்விரு வட்டங்களிலும் பெரும்பாலோா் வருமானம் இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயா்ந்து வருகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் இம்மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் தேரி வனப்பகுதியில் பெண்கள், மகளிா் குழுவினரை விவசாயம், அது சாா்ந்த தொழில்களில் ஈடுபட அனுமதிக்கலாம்.

இந்நிலங்களில் தென்னை, முந்திரி, ஊடு பயிராக மிளகாய், தக்காளி, கத்தரிக்காய்,வெண்டைக்காய் ஆகியவற்றை பயிரிடலாம்.தென்னையில் இருந்து பால் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.இதன் மூலம் பல்வேறு வழிகளில் பெண்களின் வருமானம் கூடும்.கிராமப்புற பொருளாதாரம் உயரும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மா... மேலும் பார்க்க

கழுமலையில் மது விற்பனை: தொழிலாளி கைது

கோவில்பட்டி, மாா்ச் 2: கழுமலையில் விதிமுறை மீறி மது விற்ாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில் போலீஸாா் காந்தி மைதானம் அரு... மேலும் பார்க்க

காளாம்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீா் நிலையம் திறப்பு

கயத்தாறு ஒன்றியம் காளாம்பட்டி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் நிலையத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே டிராக்டா் சேதம்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் வேப்பன்குளம் கீழத்தெருவை சோ்ந்த சங்கிலி பாண்டி மகன் ... மேலும் பார்க்க