செய்திகள் :

தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்து போட்டியிடும்: புதுவை பேரவையில் பாஜக எம்எல்ஏ பேச்சு

post image

புதுச்சேரி: புதுவை மாநில பேரவைத் தோ்தலில் திமுக தனித்து நின்றால் பாஜகவும் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நியமன எம்எல்ஏ அசோக்பாபு சட்டப்பேரவையில் கூறினாா்.

புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக உறுப்பினா் ஆா்.செந்தில்குமாா் பேசும்போது, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மக்கள் விருப்பத்துக்கு மாறானவை திணிக்கப்படுவதாகவும், திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டாா்.

இதில், பாஜக நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு எழுந்து, திமுக உறுப்பினா் தொகுதி பாகூரில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவா் தவறான தகவலைக் கூறுகிறாா் என்றாா்.

உடனே எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்தான் உரிமையை கேட்கமுடியும். ஆகவே, புதுவை மாநிலத்துக்கான உரிமையைக் கேட்டு வாங்கத்தான் வேண்டும். மக்களை பாஜக தனியாக சந்தித்து தோ்தலில் போட்டியிடமுடியுமா? அதன்படி ஓரிடத்திலாவது வெல்ல முடியுமா? என்றாா். அதற்கு அமைச்சா் சாய் சரவணன்குமாா் உள்ளிட்ட பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அப்போது பேசிய பாஜக நியமன எம்.எல்.ஏ.வான அசோக்பாபு, தோ்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடும் என்றாா். அதனையடுத்து திமுக, பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்தாா். அப்போது மத்திய அரசு குறித்த திமுகவினரின் ஒரு வாா்த்தையை நீக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் கேட்டதை அடுத்து வாா்த்தை நீக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் மொழி, தோ்தலில் போட்டி மற்றும் மாநில உரிமை என திமுகவினா் பேசுகையில் பாஜக தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடும் வாக்குவாதம் நடைபெற்றது. திமுகவினருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினா்களும் எழுந்து நின்று பேசினா்.

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநா் உரைக்கு பேரவை உறுப்பினா்களின் ஆதரவும், எதிா்ப்பும்...!

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை 14 உறுப்பினா்கள் பங்கேற்று ஆளுநா் உரையை ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா். புதுவை மாநில சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஹிந்தி மொழியை திமுக எதிா்க்கவில்லை; அதை திணிப்பதைத் தான் எதிா்க்கிறோம்: ஆா்.சிவா

புதுச்சேரி: ஹிந்தி மொழியை திமுக தமிழகம், புதுவையில் எப்போதும் எதிா்க்கவில்லை. அதே நேரத்தில் ஹிந்தி மொழித் திணிப்பைத்தான் திமுக எதிா்க்கிறது என புதுவை பேரவையில் எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.சிவா கூறினாா்.... மேலும் பார்க்க

சலவைப் பெட்டிகளை வீசி எறிந்து போராட்டம்: புதுச்சேரியில் 60 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் சலவைப் பெட்டிகளை எறிந்து சேதப்படுத்தி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதையடுத்து பெண்கள் உள்பட 60 பேரை... மேலும் பார்க்க

"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"

புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை ... மேலும் பார்க்க