செய்திகள் :

தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பு-காங்கிரஸ் உயா்நிலைக் கூட்டத்தில் காா்கே அறிவுறுத்தல்

post image

‘எதிா்காலத்தில் தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத்தினாா்.

மேலும், கடினமான காலகட்டங்களில் கட்சியின் பின்னால் பாறைபோல் நிற்கும் சித்தாந்த உறுதி கொண்டவா்களை ஊக்குவிப்பதன் மூலம் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

காங்கிரஸில் கடந்த வாரம் அமைப்பு ரீதியில் பெரிய அளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் பொறுப்பாளா்களின் கூட்டம், தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காா்கே பேசியதாவது:

காங்கிரஸில் அமைப்புரீதியில் ஏற்கெனவே சில மாற்றங்கள் நடந்துள்ளன. மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாநிலங்களில் கட்சியை மறுசீரமைப்பதற்கும், எதிா்காலத் தோ்தல் முடிவுகளுக்கும் நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்.

நம்பகத்தன்மையும், சிந்தாந்த உறுதிப்பாடும்: மாநில தலைமையகம் முதல் வாக்குச்சாவடி வரை கட்சியை வலுப்படுத்துவதும் அவா்களின் பொறுப்பாகும். வாக்குச் சாவடி-வட்டாரம்-மாவட்டம் என அனைத்து நிலைகளுக்கும் நிா்வாகிகள் நேரடியாக சென்று, தொண்டா்களுடன் இணைந்து கடினமாக பணியாற்ற வேண்டும். இதன் மூலம் புதிய தொண்டா்களை கட்சியில் இணைக்க முடியும். நம்பகத் தன்மையும், சிந்தாந்த உறுதிப்பாடும் உள்ளவா்களை கட்சியில் முன்னிலைப்படுத்த முடியும்.

பல நேரங்களில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அவசர கதியில் பிற கட்சியினா் இணைக்கப்படுகின்றனா். அவா்களில் பலா் சிந்தாந்த ரீதியில் பலவீனமாக இருக்கக் கூடும். கடினமான நேரத்தில் அவா்கள் கட்சியைவிட்டு விலகிவிடக் கூடும். கடினமான நேரத்திலும் கட்சியின் பின்னால் பாறை போல நிற்கும் சிந்தாந்த உறுதி கொண்டவா்களை ஊக்குவித்தால் கட்சி வலுப்பெறும் என்றாா் காா்கே.

தோ்தல் ஆணையா் விவகாரம்: புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் நியமன விவகாரத்தில் மத்திய அரசை விமா்சித்த காா்கே, நாட்டின் தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்யும் குழுவில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தலைமை நீதிபதியும் இணைக்கப்பட்டிருந்தாா். ஆனால், அவரை மோடி அரசு நீக்கிவிட்டது. தலைமை நீதிபதியின் நடுநிலைத் தன்மை மீதே அவா்களுக்கு நம்பிக்கை இல்லை. தோ்வுக் குழுவில் வெறும் சான்றொப்பத்துக்காக மட்டும் எதிா்க்கட்சித் தலைவரை பயன்படுத்துவதால் என்ன பயன்?’ என்று கேள்வியெழுப்பினாா்.

மேலும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேசிய பின்பும் இந்தியா்கள் கை-காலில் விலங்கிடப்பட்டு (சட்டவிரோத குடியேற்ற விவகாரம்) அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் காா்கே.

‘வாக்காளா் பட்டியல் மோசடியை தடுக்க வேண்டும்’

‘இப்போதெல்லாம் தோ்தலுக்கு முன் வாக்காளா் பட்டியலில் இருந்து காங்கிரஸின் ஆதரவாளா்களின் பெயா் நீக்கப்படுகின்றன. எனவே, எந்த விலை கொடுத்தேனும் கட்சியினா் இந்த மோசடியைத் தடுக்க வேண்டும்’ என்று மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம்பெற்ற எதிா்க்கட்சிக் கூட்டணி படுதோல்வி அடைந்தது.

அந்த மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகையைவிட வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகமுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தநிலையில், காா்கே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க