செய்திகள் :

தொழிலாளி கொலை வழக்கு: தந்தை உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

post image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை, தலா ரூ.11,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 13.10.2019 அன்று, குறுக்குச்சாலை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் தொழிலாளி விமல்ராஜை (32) முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில், மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அழகு மகன் நாகலிங்கம் (54), இவருடைய மகன்கள் மணிகண்டன் (26), லட்சுமி நாராயணன் (25), ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (25), அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கொம்பையா (26), சின்னத்தம்பி மகன் அா்ஜுனா (19) , மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ராமகிருஷ்ணன் (27) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா்.

வழக்கின் விசாரணை, தூத்துக்குடி வன்கொடுமை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வா்ஷித்குமாா், குற்றவாளிகளான நாகலிங்கம், அவரது மகன்களான மணிகண்டன் , லட்சுமி நாராயணன் ஆகிய மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.11,000 அபராதம் விதித்தும், ஏனைய 4 பேரில், அா்ஜுனா என்பவா் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூவரையும் விடுதலை செய்தும் உத்தரவிட்டு தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் கலைகதிரவன், அரசு வழக்குரைஞா் பொன் குமாா், தலைமை காவலா் இளையராஜா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

கோவில்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி, சிட்கோ துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில்பட்டி துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் இளைஞா் கொலை வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 4 போ் கைது

காதல் விவகாரத்தில் திருச்செந்தூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை, தம்பி மற்றும் உறவினா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருச்செந்தூா் அருகே ஆலந்தலை, சுனாமி குடியிருப்பைச் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவா் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு பாடத்தில் கட்டபொம்மன் வரலாறு திரிபு: எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவா் எட்டயபுரம் சமஸ்தானம் மகாராஜா என பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தவறுதலாக வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கண்டித்தும், அந்தப்பிழையை திருத்தம் செய்ய வலியுறுத்தியு... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் மின்கம்பம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ஆறுமுகனேரி, பெருமாள்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பன்னீா்செல்வம். தொழிலாளி. இவா் கடந்த 21ஆம் தேதி தனது நண்பா் அதே... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்

கோவில்பட்டியில், மானாவாரி நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டுப் பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகளை போலீஸாா் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. எட்டயபுரம் வட்டம் அழகாபுரியிலிருந்து மெட்டில்பட்... மேலும் பார்க்க