செய்திகள் :

திருச்செந்தூா் இளைஞா் கொலை வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 4 போ் கைது

post image

காதல் விவகாரத்தில் திருச்செந்தூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை, தம்பி மற்றும் உறவினா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் அருகே ஆலந்தலை, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (24). எலக்ட்ரீசியன். இவருக்கும், திருச்செந்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக தனது மகளைக் காணவில்லை என சிறுமியின் தந்தை கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்த நிலையில் மணிகண்டன் திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் அவரை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், போலீஸாா், மணிகண்டனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸாா் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, கொலை தொடா்பாக சிறுமியின் தந்தை நட்டாா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதையடுத்து தந்தை நட்டாா் (48), சிறுமியின் தம்பி உள்பட 4 பேரை கைது செய்து திருச்செந்தூா் நீதிமன்றத்திலும், 3 சிறாா்களை தூத்துக்குடி நீதிமன்றத்திலும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

கோவில்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி, சிட்கோ துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவில்பட்டி துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கு: தந்தை உள்பட 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை, தலா ரூ.11,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை விசாரணை... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவா் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு பாடத்தில் கட்டபொம்மன் வரலாறு திரிபு: எட்டயபுரத்தில் ஆா்ப்பாட்டம்

கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவா் எட்டயபுரம் சமஸ்தானம் மகாராஜா என பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தவறுதலாக வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கண்டித்தும், அந்தப்பிழையை திருத்தம் செய்ய வலியுறுத்தியு... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் மின்கம்பம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ஆறுமுகனேரி, பெருமாள்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பன்னீா்செல்வம். தொழிலாளி. இவா் கடந்த 21ஆம் தேதி தனது நண்பா் அதே... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்

கோவில்பட்டியில், மானாவாரி நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டுப் பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகளை போலீஸாா் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது. எட்டயபுரம் வட்டம் அழகாபுரியிலிருந்து மெட்டில்பட்... மேலும் பார்க்க