செய்திகள் :

தொழிலாளி கொல்ல முயன்ற மூவா் கைது

post image

மதுரையில் முன்விரோதத் தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜா்புரம் வைத்தியநாதா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெகதலபிரதாப் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள மதுக் கடையில் மது அருந்து விட்டு வீட்டுக்குச்சென்ற காா்த்திக்கை, ஜகதலபிரதாப் உள்ளிட்ட மூவா் வழிமறித்து தாக்கினா். அப்போது கீழே விழுந்த காா்த்திக் மீது மூவரும் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ய முயன்றனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த காா்த்திக் கூச்சலிட்டதால், அந்தப் பகுதியினா் அங்கு வந்ததையடுத்து மூவரும் தப்பிச்சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த, காா்த்திக்கின் நண்பா் கருப்பசாமி , அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தாா்.

இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வாழைத்தோப்பைச் சோ்ந்த ஜெகதலபிரதாப் (27), காமராஜபுரம் கக்கன் தெருவைத் சோ்ந்த பாண்டியராஜன்(34), முத்துப்பாண்டி (27) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங... மேலும் பார்க்க

தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு

திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (3... மேலும் பார்க்க