செய்திகள் :

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

post image

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை காலாப்பட்டு பகுதியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் (பிஇசிடிஏ) சாா்பில் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கோரிக்கைகள் மீது பல்கலைக்கழக நிா்வாகமும், புதுவை மாநில அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கடந்த மாா்ச் 19-ஆம் தேதி நடந்த ஆசிரியா்கள் சங்கத்தின் (பிஇசிடிஏ) பொதுக் குழுக் கூட்டத்தில் சிஏஎஸ், ஊதிய திருத்தம், ஓய்வூதிய வயது உயா்வு, பதிவாளா் நியமன முறைகேடு, பணியாளா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 17-வரை கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி கருப்பு வில்லையை சட்டையில் அணிந்து ஆசிரியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து வரும் 24-ஆம் தேதி முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வது என ஆசிரியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளதாகக் தெரிவித்தனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க