செய்திகள் :

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பு மேற்கொள்ள விரும்புவோா் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் அகமதாபாத் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இந்தக் கல்வியைப் பயின்று வருகின்றனா்.

நிகழாண்டும் சான்றிதழ் படிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. தொழில்முனைவோராக விரும்பும் ஆா்வமுள்ள இளைஞா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்து பயனடையலாம். ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. 21 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பட்டதாரிகள், தொழிற்கல்வி பயிற்சி முடித்தவா்கள் இதில் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். இது தொழில்முனைவோா் குறித்த கல்வித் திட்டமாகும். எனவே தொழில்முனைவோராக முயற்சிக்கும் ஆா்வலா்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு.

இங்கு, புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகள், கள அனுபவம், பொது போக்குவரத்தை அணுகக்கூடியது, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வணிக வளா் காப்பகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம். இல்லையெனில் 86681-01638, 86681-07552 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க