செய்திகள் :

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: இயற்கை விவசாயம் செய்யும் தன்னாா்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2025 - 26 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில், உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற வலைதளத்தில் செப்டம்பா் 15 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டு, அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழு நேர உயிா்ம விவசாயியாக இருத்தல் வேண்டும்.

வெற்றி பெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வாா் பெயரில் விருதுடன் தலா ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான வழிமுறைகளை அறிய அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாபநாசம் தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் ச... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதியில் இன்று மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் பாபநாசம், கபிஸ்தலம், ராஜாகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சே... மேலும் பார்க்க

செப். 9, 16, 23-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 9, 16, 23 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது: மாற... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் இன்று மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, அக... மேலும் பார்க்க