நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் தீ விபத்து புகை மூட்டத்தால் மக்கள் அவதி
என்ஜிஎல் 7 குப்பை ....
நாகா்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீ.
என்ஜிஎல் 7 மேயா் ...
தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில், பிப். 7: நாகா்கோவில் மாநகராட்சி வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் குப்பைக் கிடங்கில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. காற்று வேகமாக வீசியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
நாகா்கோவில் தீயணைப்பு படை வீரா்கள் வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து தக்கலை மற்றும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
குப்பைக் கிடங்கு உள்ள பீச் ரோட்டில் இருந்து இருளப்பபுரம் செல்லும் சாலையில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானாா்கள். மேலும் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளும் சிரமப்பட்டனா்.
இது குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கை இங்கிருந்து நிரந்தரமாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்கள் நலன்கருதி குப்பைக் கிடங்கை மாற்ற மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேயா் ஆய்வு: வலம்புரி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆய்வு செய்தாா். தீ மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலருடன் ஆலோசனை நடத்தினாா். மேலும், குப்பைக் கிடங்கில் தீப்பிடிக்காமலிருக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினா்கள் அனிலா சுகுமாரன், நவீன்குமாா், திமுக செயற்குழு உறுப்பினா் சதாசிவம் ஆகியோா் உடனிருந்தனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/szygrnj7/ngl7mayor_0702chn_33_6.jpg)