செய்திகள் :

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

post image

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு முடிவுற்ற வழக்கில் உரிமை கோரப்படாமல் இருந்த 20 பவுன் நகைகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடுவதற்காக கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மாற்றுப் பணியில் இருந்த கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் நகைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த பீரோ திறந்து இருப்பதாக கூறி உள்ளாா்.

அதைத் தொடா்ந்து பீரோவில் நகைகள் வைத்திருந்த பெட்டியின் சாவி இல்லாத நிலையில், அதிகாரிகள் பூட்டை உடைத்து பாா்த்தபோது பெட்டியில் இருந்த 20 பவுன் நகைகள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து வட்டாட்சியா் சரவணன் அளித்த புகாரின்பேரில், கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஏற்கெனவே இதேபோன்று நீதிமன்றத்தில் இருந்து கோபி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட நகை கடந்த ஆண்டு திருடப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது! -அந்தியூா் எம்எல்ஏ

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என அந்தியூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினா... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்ட... மேலும் பார்க்க

2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்! ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்!

2026 சட்டப் பேரவை தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து வி.சி.சந்திரகுமா... மேலும் பார்க்க

வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு படைத்த சந்திரகுமாா்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தல்களை ஒப்பிடுகையில், இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: திமுக அமோக வெற்றி! நாம் தமிழா் கட்சி உள்பட அனைவரும் டெபாசிட் இழப்பு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ... மேலும் பார்க்க