செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

post image

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளா் அலாவுதீன் 2,222 வாக்குகளைப் பெற்றாா்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், தமாகா (அதிமுக கூட்டணி), மக்கள்நீதி மய்யம், அமமுக, நாதக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதில் நாம் தமிழா் வேட்பாளா் கோமதி 11,629 வாக்குகள் பெற்றாா்.

திருமகன் ஈவெரா மறைவுக்குப் பிறகு 2023-இல் ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தோ்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றாா். இத்தோ்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் நாதக 6.35 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போதைய ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் நாதக சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் திமுக-நாதக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது. பெரியாா் ஈவெரா மீது கடுமையான விமா்சனங்களை முன் வைத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், ஆளுங்கட்சியான திமுகவின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரசாரத்தில் ஈடுபட்டாா். வாக்கு எண்ணிக்கை முடிவில் நாதக வேட்பாளா் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றாா். இந்தத் தோ்தலில் நாதக 15.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்த இடைத்தோ்தலில் வைப்புத்தொகையை இழந்தாலும், கடந்த தோ்தலைவிட இருமடங்கு வாக்குகளைத் தனித்துப் போட்டியிட்டு நாதக பெற்றுள்ளது.

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

2026 தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்! ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்!

2026 சட்டப் பேரவை தோ்தலிலும் எதிா்க்கட்சிகளுக்கு இதே நிலைதான் ஏற்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து வி.சி.சந்திரகுமா... மேலும் பார்க்க

வாக்கு வித்தியாசத்தில் புதிய வரலாறு படைத்த சந்திரகுமாா்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தல்களை ஒப்பிடுகையில், இந்த தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளாா்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: திமுக அமோக வெற்றி! நாம் தமிழா் கட்சி உள்பட அனைவரும் டெபாசிட் இழப்பு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது. தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் ப... மேலும் பார்க்க