செய்திகள் :

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

post image

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது.

தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றம் லாரிகள் கட்டுப்படுத்துவதற்கு 16.1 டன் அதிக பாரம் கொண்ட லாரிகள் மற்றும் 10 சக்கர வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழக- கா்நாடக எல்லையில் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இந்நிலையில், இரு மாநில எல்லையில் தாளவாடி கிராமங்களில் உள்ள பால் குளிரூட்டு நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுடன், டேங்கா் லாரி சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

திம்பம் மலைப் பாதை 1-ஆவது வளைவில் லாரி திரும்பும்போது, நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டேங்கா் லாரி இருந்த பால் சாலையில் கொட்டி வீணானது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டேங்கா் லாரியிலிருந்து கொட்டிய பால் வெளியேறாத படி மூடியை போட்டு அடைத்தனா். இதனால் மேலும் பால் வீணாவது தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநா் வெங்கடேஷ் லேசான காயத்துடன் தப்பியதாகவும், 10 ஆயிரம் லிட்டா் பால் வீணானதாக போலீஸாா் தெரிவித்தனா். டேங்கா் லாரியை மீட்கும் நடவடிக்கையில் போலீஸாா் மற்றும் வாகன ஓட்டிகள் ஈடுபட்டனா்.

பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்... மேலும் பார்க்க

அலங்காரம்

கோபியில் தை வெள்ளிக்கிழமையையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கடை வீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன். மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்... மேலும் பார்க்க

கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்த... மேலும் பார்க்க

பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி

பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா். பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளி... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் இந்திய அ... மேலும் பார்க்க